புதுடெல்லி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய பி, இந்திய ஏ (மகளிர்) அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய பி அணியும், மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கங்களை வென்றன. அந்த அணி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். பதக்கம் வென்ற குகேஷ், நிஹல் சரீன், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கும் வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட்டதோடு, உறுதியான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.
மேலும் தமிழில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
10 hours ago