செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், அர்மேனியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப் பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கமும் வென்றன. மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. 11 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் 2.5-1.5 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் அப்துசட்டோரோவ் நோடிர்பெக், யாகுபோவ் நோடிர்பெக், சிந்தரோவ் ஜாவோகிர் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்திருந்தனர்.
இளம் வீரர்களை உள்ளடக்கிய உஸ்பெகிஸ்தான் அணி போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் அர்மேனியா 12-வது இடம் வகித்தது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் தலா 19 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் டை-பிரேக் புள்ளிகளை உஸ்பெகிஸ்தான் அணி சிறப்பாக வைத்திருந்ததால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அர்மேனியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
15 mins ago
க்ரைம்
21 mins ago
க்ரைம்
30 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago