ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
68வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது சென்னை. மொயீன் அலி இன்று நட்சத்திர பேட்ஸ்மேனாக கலக்கினார். 57 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தோனி 26 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால் சிறப்பான துவக்கம் அளித்தார். கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இன்றைய போட்டியில் அரைசதம் கடந்து 59 ரன்கள் குவித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு அடுத்து வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை. எனினும், தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் நிலைத்து நின்று ஆடினார்.
அவரின் ஆட்டத்தால் வெற்றி இலக்கை நெருங்கியது. இரண்டு பந்துகளை 1 ரன்கள் தேவை என்ற போது பவுலர் வைடாக வீச ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அஸ்வின் கடைசி வரை அவுட் ஆகாமல் 40 ரன்கள் சேர்த்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 mins ago
க்ரைம்
5 mins ago
இந்தியா
19 mins ago
சுற்றுலா
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago