IPL 2022 | RR vs MI - 159 ரன்களை விரட்டி வருகிறது மும்பை இந்தியன்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்து 158 ரன்களை எடுத்தது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். படிக்கல் 15 ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். களத்தில் இருந்த பட்லர் மற்றும் மிட்செல் ரன் சேர்க்க தடுமாறினர். மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் அணி மொத்தம் 62 ரன்கள் தான் எடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 56 ரன்களை சேர்த்தது. 16-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி இருந்தார் பட்லர். அவர் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அஸ்வின், 9 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மும்பை அணி சார்பில் மெரிடித், ஹிருத்திக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேனியல் சாம்ஸ் மற்றும் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். தற்போது மும்பை அணி 159 ரன்களை விரட்டி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

39 mins ago

ஓடிடி களம்

41 mins ago

விளையாட்டு

56 mins ago

சினிமா

58 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்