ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை கால் இறுதி போட்டியில் நிது, அனாமிகா

By செய்திப்பிரிவு

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது, அனாமிகா ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுகுத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிது, ரஷ்யாவின் யூலியா சும்கலகோவாவை எதிர்த்து மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம்செலுத்திய நிது 5-0 என்ற கணக்கில்வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் இத்தாலியின்ராபர்ட்டா பொனாட்டியை எதிர்கொள்கிறார் நிது. 50 கிலோ எடைப் பிரிவில்இந்தியாவின் அனாமிகா, பல்கேரியாவின் ஸ்லாடிஸ்லாவா சுகனோவாவைஎதிர்கொண்டார். இதில் அனாமிகா 4-1 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் அனாமிகா, அல்ஜீரியாவின் ரூமைசாவை எதிர்கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்