பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று பி பிரிவில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதியது. இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஸ்டெபானி டெய்லர் 47 ரன்களையும், டியாண்டிரா டாட்டின் 45 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் 23 ரன் களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை மட்டுமே எடுக்க முடிந் தது. இந்திய அணியில் அதிகபட்ச மாக அனுஜா பாடீல் 26 ரன்களை யும், ஜுலன் கோஸ்வாமி 25 ரன் களையும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் டாட்டின் 3 விக் கெட்களை வீழ்த்தினார். இந்த தோல் வியால் இந்திய அணி பி பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 mins ago
சுற்றுலா
5 mins ago
வணிகம்
5 hours ago
இந்தியா
30 mins ago
சினிமா
25 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago