டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் முதல் சுற்றில் சீனாவின் ஜூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இதில் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு பாராலிம்பிக் சாம்பியனான ஜூ யிங், 11-3, 11-9, 11-2 என்ற நேர் செட்டில் பவினாபென்னை வீழ்த்தினார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பவினாபென் தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் மேகன் ஷாக்லெட்டனுடன் இன்று மோதுகிறார்.

முன்னதாக மகளிருக்கான கிளாஸ் 3 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் மனுபாய் படேல், சீனாவின் கியான்லியை எதிர்கொண்டார். 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கியான் லி 9-11, 11-3,15-17, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் சோனல்பென்னை வீழ்த் தினார். டி பிரிவில் இடம் பிடித்துள்ள சோனல்பென் அடுத்த ஆட்டத்தில் இன்று தென்கொரியா வின் மி கியு லீயுடன் மோதுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 secs ago

தமிழகம்

20 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

40 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்