ஒலிம்பிக்: அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரரிடம் தோற்று அதிர்ச்சி அளித்த ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான இன்று, ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நடந்தன.

இதில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் 1-6, 6-3,6-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் இறுதிப் போட்டியில், கரென் கச்சானோவ்வை எதிர்கொள்ள இருக்கிறார்.

இந்தத் தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவு தகர்ந்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம்களில் ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறை, பிரெஞ்சு ஓபனில் 2 முறை, யு.எஸ்.ஓபனில் 3 முறை உட்பட மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம்களை ஜோக்கோவிச் வென்றிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்