ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடுவேன்: அக்சர் படேல் நம்பிக்கை

By பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடுவேன் என்று சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அக்சர் படேல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ஆடும் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடவேண்டி உள்ளது. இந்நிலையில் நானும் ரவீந்திர ஜடேஜாவும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்ப தால் அணியில் இடம்பிடிக்க எங்க ளுக்குள் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால் நான் அவரை போட்டியாளராக கருதவில்லை. நண்பராகவே கருதுகிறேன். மேலும் நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் இரு வருக்கும் அணியில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் ஏற்கெனவே ஆஸ்திரேலி யாவில் ஆடியிருப்பதால் அந்த அனுபவம் எனக்கு கைகொ டுக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஆட வாய்ப்பு கிடைத் தால் சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்துவேன்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தாலும் டி20 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கவுள்ள நிலையில் இந்த அணியில் இடம்பெற விரும்பினேன். எனினும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் காலம் உண்டு என்பதால் அதற்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

11 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்