ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி யில் தமிழக அணி மும்பையிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மும்பை மற்றும் தமிழக அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 95 ரன்களையும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 294 ரன்களைக் குவித்த மும்பை அணி 236 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
பரபரப்பான இறுதி நாள் ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 83 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும் குவித்தனர். இப்போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர் டபோல்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
விளையாட்டு
4 hours ago