கொல்கத்தா வீரர் போஸ்டிகா விலகல்

By பிடிஐ

அட்லெடிகோ டி கொல்கத்தா அணி யின் நட்சத்திர வீரரான ஹெல்டர் போஸ்டிகா காயம் காரணமாக அடுத்த 3 அல்லது 4 வாரங்கள் வரை விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டிகாவின் விலகல் கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் அணிக்காக 3 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவரான போஸ்டிகா, கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணிக்கு எதிராக இரு கோலடித்தார்.

அதன்பிறகு தசைப்பிடிப்பு ஏற் பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட் டார். இந்த நிலையில் காயத்துக்கு தனது தனிப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக போஸ்டிகா போர்ச்சுகல் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக அட்லெடிகொ அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போஸ்டிகாவுக்கு தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பதால், அது தொடர்பாக அணி உரிமை யாளர்களின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவர் விரைவாக குணமடைய வேண்டுமெனில் உடனடியாக நாடு திரும்ப வேண் டும் என அவருடைய தனிப்பட்ட மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

அதனால் அடுத்த 3 அல்லது 4 வாரங்கள் போஸ்டிகா விளையாட மாட்டார். வரும் 29-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள கொல்கத்தா-டெல்லி இடையிலான போட்டியில் அவர் விளையாடுவார்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்