பந்தைத் தவற விட்டால் உடனே தோனி இடத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்கின்றனர்: அழுத்தம் குறித்து கே.எல்.ராகுல் 

By பிடிஐ

விக்கெட் கீப்பிங்கில் தோனியின் இடத்தை இட்டு நிரப்புவது மிகக் கடினம், கடும் அழுத்தம் ஏற்படுகிறது என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

தோனி தன் ஓய்வு குறித்தும் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவது குறித்தும் அணித்தேர்வுக்குழு மற்றும் ரசிகர்களை பித்துப்பிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்திய அணி தோனியைக் கடந்து வேறு திசையில் நகர ஆரம்பித்து விட்டது.

ரிஷப் பந்த், ராகுல் என்று மாற்று வழிகளை ஸ்திரப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் தோனியின் இடத்தை இட்டு நிரப்புவது பற்றி கே.எல். ராகுல் கூறியதாவது:

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யு போது பதற்றமாக உள்ளது. ஏனெனில் ரசிகர்கள் உன்னிப்பாகப் பார்க்கின்றனர். பந்தைத் தவற விட்டால் உடனே இவர் தோனியின் இடத்துக்குச் சரிப்பட மாட்டார் என்று நினைத்து விடுகின்றனர். மக்கள் அவ்வளவு எளிதாக புதியவர்களை ஏற்பதில்லை.

ஆனால் என்னை நன்றாக அறிந்தவர்களுக்குத் தெரியும் நான் விக்கெட் கீப்பிங்கில் எப்படி தினசரி பயிற்சியில் இருக்கிறேன் என்று. மேலும் அணி என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதை ஏற்கவே நான் விரும்புவேன்.

இவ்வாறு கூறினார் கே.எல்.ராகுல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்