ஹீரோ ஐ லீக் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்சி அணி அபாரமாக விளையாடி இந்தியன் ஏரோஸ் அணியை வீழ்த்தியது.
மும்பை கூப்பரேஜ் ஸ்டேடியத்தில் இந்த லீக் ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை சிட்டி எப்சி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. ஆனால் 2-வது பாதியின் தொடக்கத்திலேயே சென்னை சிட்டி வீரர் அடோல்பா மிராண்டா அரவ்ஜோ கோலடித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அடோல்பா கோலடித்த 12-வது நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்தார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் கட்சுமி யுசா. இதனால் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே சென்னை சிட்டி எப்சி அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை சிட்டி அணி 19 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
இந்தியா
34 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago