இப்போதெல்லாம் கிரிக்கெட் என்பது பணமழை ஆட்டம் ஆகிவிட்டதால் வாரியங்களும், ஐசிசியும் வீரர்களை பிழிந்து எடுக்கும் வகையில் தொடர்களை அமைத்து வருகின்றன. போதாதென்று தனியார் டி20 கிரிக்கெட் தொடர்கள் வேறு வீரர்களைக் களைப்படைய, வெறுப்படையச் செய்து வருகின்றன.
கிரிக்கெட்டை தங்களது வணிக மதிப்புகளுக்காக ஏதோ ‘மதிப்பு மிக்க’ ஆட்டம் போல் மார்க்கெட்டிங் ஏஜென்சிகள் இந்த ஆட்டத்தை மட்டுமே பரப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் கோலி கூட வீரர்கள் அதிகமாக கிரிக்கெட் போட்டிகளை ஆட வேண்டியுள்ளது ஆண்டில் 300 நாட்கள் மைதானத்தில்தான் இருக்கிறோம் என்று வீரர்கள் பற்றி கவலைகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கபில்தேவ் இது குறித்துக் கூறும்போது, “நெருக்கமான தொடர்களினால் விரைவில் வீரர்கள் சோர்ந்து விடுகிறார்கள் என்றால் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடாமல் இருக்கட்டும், கிளப்பை விட நாடுதான் முக்கியம் என்ற முடிவை எடுக்கட்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே முக்கியம்தான். அப்படி டெஸ்ட் போட்டிகள் முக்கியமில்லை என்றால் அவர்கள் புள்ளிவிவரங்கள் பற்றி பேசக்கூடாது.
எதிரணியினரை மதிக்க வேண்டும், ஏனெனில் எந்த ஒரு கிரிக்கெட்டிலும் வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றார் கபில்தேவ்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago