விராட் கோலிதான் அந்த முடிவை எடுக்கிறார்: சவுரவ் கங்குலி

By செய்திப்பிரிவு

விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக கே.எல்.ராகுலைப் பாராட்டிப் பேசிய கங்குலி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுடன் டெஸ்ட் போட்டிகளிலும் இதே ஃபார்மை ராகுல் தொடர்வார், அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரிஷப் பந்த் இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது, சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் ஆடுவது சிரமமாகியுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பந்த்தை நீக்கி விட்டு ராகுலை விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக மாற்றியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, “விராட் கோலி அந்த முடிவை எடுத்துள்ளார், அணி நிர்வாகமும் பயிற்சியாளரும் ராகுல் பணி என்னவென்பதை முடிவெடுக்கிறார்கள்.

ராகுல் ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார், டெஸ்ட்களில் நன்றாகத் தொடங்கினார் ஆனால் பிறகு சற்றே பின்னடைவு கண்டார். ஆனால் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் நன்றாக ஆடுகிறார். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல் விராட் கோலியும் அணி நிர்வாகமுமே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர்.

விக்கெட் கீப்பிங்கில் போட்டி இருப்பது ஆரோக்கியமானதே, ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதை ரவி சாஸ்திரியும், கோலியும் முடிவு செய்வார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன் படி நடக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்