மும்பை ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்த போது பாட் கமின்ஸ் பந்து வீசிய போது பவுன்சரில் தலையில் அடி வாங்கினார், இதனால் அவருக்கு கன்கஷன் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் களமிறக்கப்படவில்லை, தற்போது ராகுல் கீப் செய்து வருகிறார்.
இந்த பவுன்சரில்தான் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார், கமின்ஸ் பவுன்சர் ஒன்று வேகமாக வந்தது புல் ஷாட் ஆட முயன்றார் பந்த், டாப் எட்ஜ் எடுத்து பந்து ஹெல்மெட்டைத் தாக்கி கேட்ச் ஆனது. அவுட் ஆனதோடு அவர் வெளியேறினார்.
ஆனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தொடங்கும் போது பந்த் இல்லை, ராகுல் விக்கெட் கீப்பிங் பேடு மற்றும் கிளவ்வுடன் இறங்கினார், இதனையடுத்து பிசிசிஐ-யிடம் கேட்ட போது ரிஷப் பந்த் பவுன்சரில் தலையில் பந்து பட்டதால் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.
இந்திய அணி சரிவு கண்ட போது பந்த் 28 ரன்களை எடுத்திருந்தார் அப்போதுதான் கமின்சின் ஆக்ரோஷ பவுன்சரில் காயமடைந்து அவுட்டும் ஆனார்.
பந்த் இந்த தொடரிலிருந்து விலகினால் மீண்டும் காய பதிலியாக சஞ்சு சாம்சன் வருகிறாரா அல்லது ராகுலையே கீப் செய்ய வைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
24 mins ago
க்ரைம்
14 mins ago
இந்தியா
28 mins ago
சுற்றுலா
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago