ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் மான்டீரோ

By செய்திப்பிரிவு

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் விளையாடுவதற்காக பிரேசில் அணியின் முன்னாள் பின்கள வீரரான இடெர் மான்டீரோ பெர்னாண்டஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது சென்னையின் எப்.சி. அணி.

அடுத்த மாதம் 32 வயதை எட்ட வுள்ள மான்டீரோ, இதற்கு முன்னர் சைப்ரஸ் லீக்கில் நியா சலாமிஸ் அணிக்காக விளையாடிக் கொண் டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மான்டீரோவுடனான ஒப்பந்தம் குறித்து சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் மார்க்கோ மெட்டாரஸி கூறுகையில், “மான் டீரோவுடன் ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஐரோப் பாவில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

இப்போதும் அவர் மத்திய பின்களத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். அவருடைய வருகையால் எங்களுடைய பின்களம் பலம் பெறும். அவர் இந்திய வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார். அவர் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்றார்.

சென்னை எப்.சி. அணியில் இடம்பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மான்டீரோ, “கடந்த ஆண்டு தொடங்கிய ஐஎஸ்எல் போட்டி சர்வதேச அளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. அதில் பங்கேற்க நான் ஆர்வமுடன் இருக்கிறேன். சென்னை அணியில் இலானோ, மென்டி போன்ற தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்களுடன் இணைந்து விளையாட விருப்பது மிகச்சிறப்பானதாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்