ரிஷப் பந்த் மீதான  பிரையன் லாராவின் கரிசனம்

By செய்திப்பிரிவு

இந்திய அணியில் தற்போது தோனியின் இடத்தில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால் அவரது பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.

தொடர்ந்து அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வருகிறார், மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் முக்கிய கேட்ச் ஒன்றையும் தவற விட்டது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்தது, மேலும் பேட்டிங்கில் கடைசி 4 ஒவர்களில் 26 ரன்களே அவர் கிரீசில் இருக்கும் போது அடிக்கப்பட்டது.

கேட்ச் விட்டதையும் கடைசி 4 ஓவர்களில் சொதப்பியதையும் கேப்டன் விராட் கோலி தன் பேட்டியில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் மாஸ்டர் பேட்ஸ்மேன் பிரையன் லாரா ரிஷப் பந்த் பற்றி கரிசனம் காட்டிக் கூறும்போது, “ரிஷப் பந்த் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை, அவர் முதிர்ச்சி பெற அனுமதிக்க வேண்டும். அவர் மீது கூடுதல் மன அழுத்தச் சுமையை ஏற்றக் கூடாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்