ராஜ்கோட் டி20: டாஸ் வென்று இந்தியா பீல்டிங்; அணியில் மாற்றமில்லை; மீண்டும் சஞ்சு சாம்சன் பெஞ்சில்

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்,

முதல் ஒருநாள் போட்டியில் தோற்றதையடுத்து வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் ஆட வேண்டியுள்ள இந்திய அணி ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்த முடிவு குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, “இந்த முறை வித்தியாசமாக ஆட முடிவெடுத்துள்ளோம். ராஜ்கோட் பிட்ச்சில் பிளவுகள் இருந்தாலும் நல்ல பிட்ச்தான். பின்னால் பனிப்பொழிவு இருக்கும், ஆகவே பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகவே இருக்கும். அணியில் மாற்றமில்லை, கடந்த போட்டியில் எங்களது ஆட்டம் சரியாகவே அமைந்தது, ஒருசில தவறுகள் நீங்கலாக” என்றார்.

கவாஸ்கர் தன் பிட்ச் அறிக்கையில் கூட பேட்ஸ்மென்களுக்குச் சாதகமானது என்றார், அவுட் பீல்ட் மழை காரணமாக மெதுவாக இருக்க வாய்ப்புள்ளது, 170-180 ரன்கள் பிட்ச் இது, ஆனால் அதற்கும் கூட நன்றாக பேட் செய்ய வேண்டும், என்றார்.

வங்கதேச கேப்டன் மஹமுதுல்லாவும் தன் அணியில் மாற்றமில்லை என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சனைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே அளித்துள்ளார் ரோஹித் சர்மா. ஒருவரை ஸ்குவாடில் எடுத்து விட்டு மீண்டும் மீண்டும் சொதப்பும் ஷிகர் தவண், ரிஷப் பந்த்துடன் ஆடுவது என்ன பிடிவாதமோ தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

55 mins ago

ஜோதிடம்

58 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்