2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

By செய்திப்பிரிவு

பாரீஸ்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சுபாங்கர் டே 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 42-ம் நிலை வீரரான இந்தியாவின் சுபாங்கர் டே, 17-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுபாங்கர் டே 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனையான கனடாவின் மிச்செலி லி-யை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்