புரோ கபடி லீக் போட்டி: அரை இறுதியில் டெல்லி - பெங்களூரு இன்று மோதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்

புரோ கபடி லீக் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இன்று டெல்லி, பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி யின் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற ‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் பெங் களூரு புல்ஸ் 48-45 என்ற புள்ளிகள் கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 46-38 என்ற கணக்கில் ஹரி யாணா ஸ்டீலர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம், பெங்க ளூரு, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள் ளன. தோல்வியின் காரணமாக உ.பி.யோதா, ஹரியாணா ஸ்டீ லர்ஸ் ஆகிய அணிகள் வெளி யேற்றப்பட்டன. இதையடுத்து நேற்று அணிகளுக்கு ஓய்வு நாளாக அமைந்தது.

இந்நிலையில் அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறவுள் ளன. இரவு 7.30 மணிக்கு நடை பெறும் முதல் அரைஇறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் அரை இறுதியில் டெல்லி அணி களம் காண்கிறது.

அதைப் போலவே நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் முடிவில் களத்தில் இறங்க வுள்ளது.

2-வது அரை இறுதி

இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - மும்பை அணிகள் சந்திக் கவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 14 வெற்றி, 5 தோல்வி, 3 டையுடன் 83 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அரை இறுதியில் மும்பையை வீழ்த்தும் நோக்கத்தில் பெங்கால் அணி விளையாடவுள்ளது.

அதே நேரத்தில் 2015-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, பெங்கால் வாரியர்ஸுக்கு சவால் விடும் நோக்கத்தில் களத்தில் குதித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்