'சென்னை தினம்' இன்று கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஒன்றான ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணி ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீண்ட பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘சென்னை தினம்’ ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ’சென்னை தினம்’ கொண்டட்டத்திற்கு ஐபிஎல் அணியான ‘ராஜஸ்தான் ராயல்ஸ்' அணி ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் , “ ஒரு மாற்றத்துக்காக இந்த நாளை நாம் சென்னையுடன் இணைந்து கொண்டாடுவோம்” என்று அணி கேப்டன் ரஹானே மற்றும் சென்னை ‘சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவுக்கு ‘சென்னை சூபர் கிங்ஸ்’ ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
A day where we can celebrate with Chennai for a change.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago