மலிங்கா ஓய்வு அறிவிப்பு: வங்கதேச தொடர் முதல் ஒருநாள் போட்டியே கடைசி

By செய்திப்பிரிவு

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியே தன் கடைசி சர்வதேச போட்டி என்று இலங்கை நட்சத்திர பவுலர் லஷித் மலிங்கா அறிவித்துள்ளார். 

இதன் மூலம் அடுத்த பவுலரை சோதனை செய்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கேப்டன் திமுத் கருணரத்னே கூறியுள்ளார். 

“வரும் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலரை அடையாளம் காண்பதில் எங்களுக்கு சிக்கல் இருந்து வருகிறது.  தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களை அடையாளம் காண்பது அவசியமாகிறது. அதே போல் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்கும் பவுலர்களையும் அடையாளம் காண வேண்டியுள்ளது. 

மலிங்கா இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் ஆடி 335 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன ரன் விகிதம் ஓவருக்கு 5.36. டி20 போட்டிகளில் 73 போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் 6/38, டி20 போட்டிகளில் 5/31 ஆகியவை ஒரு இன்னிங்ஸில் அவரது சிறந்த பந்து வீச்சாகும். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

45 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்