மகளிர் டி20 கிரிக்கெட்: தொடரை இழந்தது இந்தியா

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய அணி. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்திலும் தோல்வி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இழந்துள்ளது.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் குவித் தது. இந்திய அணியில் அதிகபட்ச மாக வனிதா 41, ஹர்மான்ப்ரீத் கவுர் 30, வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிவைன் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் சுஸீ பேட்ஸ் ரன் ஏதுமின் றியும், டிவைன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும் தொடக்க வீராங்கனை பிரைஸ் அசத்தலாக ஆடி 34 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து. இந்திய தரப்பில் ஜுலான் கோஸ் வாமி 2 விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

29 mins ago

வணிகம்

35 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

52 mins ago

ஓடிடி களம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்