கனடாவில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் போட்டிகளில் கனடா, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
கனடாவின் வான்கூவர் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் (பிஃபா) சார்பில் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 4 வாரங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 6 பிரிவுகளில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
கனடா வெற்றி
ரவுண்ட் ராபின் முறையில் குரூப் சுற்று தொடங்கியது. ஏ பிரிவில் போட்டியை நடத்தும் கனடா தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொண்டது. எட்மான்டனில் நடைபெற்ற இப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந் தனர். கனடாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.
போட்டி தொடங்கியதும் இரு அணிகளும் விறுவிறுப்பாக மோதியும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் கனடா சற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் கோலடிக் கவில்லை. கூடுதல் நேரத்தில் 92-வது நிமிடத்தில் கனடா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
கனடாவின் கிறிஸ்டினே சின்கிளேர், சீனாவின் கோல் கீப்பர் ஃபெய் வாங்கை ஏமாற்றி அற்புதமாக கோலடிக்க கனடா ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது. இப்போட்டியில் கனடா 1-0 என்ற கணக்கில் வென்றது.
நெதர்லாந்து வெற்றி
மற்றொரு போட்டியில் முதன் முறையாகக் களமிறங்கும் நெதர்லாந்தும், நியூஸிலாந்தும் மோதின. போட்டியின் முதல் பாதியில் 33-வது நிமிடத்தின்போது நெதர்லாந்தின் லைக் மார்டின்ஸ் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். மற்றொரு வீராங்கனை டேனியல் வான் டி டோங் கோலடித்தார். இருப் பினும் அது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.
நியூஸிலாந்து தரப்பில் பதில் கோலடிக்க மேற்கொண்ட முயற் சிகள் வீணாயின. அந்த அணியின் ரியா பெர்சிவல் பிரீ கிக் மூலம் கோலடிக்க முயன்றார். அதனை நெதர்லாந்து கோல் கீப்பர் லோயஸ் ஜீய்ட்ஸ் அற்புதமாக தடுத்து விட்டார். அதன் பின் இரு அணிகளும் கோலடிக்க முடிய வில்லை. இறுதியில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவில் கனடா, நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
சினிமா
6 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
30 mins ago
க்ரைம்
36 mins ago
க்ரைம்
45 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago