ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் (எலைட் பேனல்) குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரவி இடம்பெற்றுள்ளார். எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு ஐசிசி நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 2-வது இந்தியர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்தைச் சேர்ந்த மூத்த நடுவர் பில்லி பவுடன், ஓய்வு பெற்ற நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோருக்குப் பதிலாக எஸ்.ரவி, நியூஸிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெஃபானி ஆகியோர் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
2015-16-க்கான நடுவர் குழுவில் ரவி, கெஃபானி தவிர அலீம் தார், குமார் தர்மசேனா, மராய்ஸ் எராஸ்மஸ், இயான் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போரா, நிகெல் லாங், பால் ரீபிள், ரோட் டக்கர், புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரவி, 6 டெஸ்ட் போட்டி, 24 ஒருநாள் போட்டி, 12 டி20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
ஐசிசி நடுவர் குழுவில் இடம்பெற்றது குறித்து ரவி கூறுகையில், “இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். எனக்கு ஆதரவளித்த பிசிசிஐக்கும், எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஐசிசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர், நடுவர் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago