இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளை யாடி வரும் கோவா எப்.சி. அணி யில் முன்னாள் பிரேசில் தடுப்பாட்டக் காரர் லூஸியோ (லூஸிமர் பெரைரா டா சில்வா) இடம்பெற்றுள் ளார்.
இது தொடர்பாக கோவா எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவரான னிவாஸ் டெம்போ வெளியிட்டுள்ள அறிக்கையில், “2002-ல் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த லூஸியோ, 2006, 2010 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி யுள்ளார்.
எங்கள் அணியின் பயிற்சி யாளர் ஸிகோ அளித்த பரிந்துரை யின்பேரில் லூஸியோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பிரேசிலின் ஆண்ட்ரி யாஸுடனும் ஒப்பந்தம் செய்துள் ளோம். அணியை பலப்படுத்து வதற்காக மேலும் பலருடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேயன் லெவர்குசன், பேயர்ன் மூனிச் அணிகளுக்காக புந்தேஸ் லிகா போட்டியில் விளையாடி யுள்ளார் லூஸியோ. புந்தேஸ்லிகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் 3 முறை இடம்பெற்றுள்ளார். இதேபோல் இண்டர் மிலன் அணிக்காக லூஸியோ விளையாடிய காலத்தில் அந்த அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிஃபா கிளப் உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியனாகியுள்ளது. அதன்பிறகு சில காலம் யுவன்டஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago