இந்தோனேசிய ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா, காஷ்யப்

By பிடிஐ

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா 21-16, 21-18 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் தாய் நிசான் ஜிந்தாபொன்னை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

சாய்னா தனது 2-வது சுற்றில் சீன தைபேவின் யா சிங் சூவை சந்திக்கிறார். சூ தனது முதல் சுற்றில் 16-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றைப் பொறுத்தவரையில் காஷ்யப் 21-17, 21-7 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டனாங்சாக்கை 29 நிமிடங்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் தென் கொரியாவின் வான் ஹோ சன்னை சந்திக்கிறார் காஷ்யப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

சுற்றுச்சூழல்

16 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்