மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம்: ஸ்டீபன் ஃபிளெம்மிங் ஆதங்கம்

By பிடிஐ

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம். அதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.

இதனால் சூப்பர் கிங்ஸ் அணி யின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளெம்மிங் மிகுந்த ஏமாற்ற மடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் கூறியதாவது: கேட்சுகளை கோட்டைவிட்டது எங்கள் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. வாய்ப்பு களை ஏற்படுத்தியபோதும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளா ததால் தோல்வியடைந்தோம் என் றார்.

குறைவான ஸ்கோர் எடுத்திருந்த நிலையில் 19-வது ஓவரை வீச அனுபவ வீரரான ஜடேஜாவை அழைக்காமல் பவன் நெஹியை அழைத்தது தவறான முடிவாக இருந்திருக்கலாம் எனக்கூறிய ஸ்டீபன் ஃபிளெம்மிங், “நிச்சயமாக அதை தோனியும் சிந்தித்து இருப்பார். இன்றைய ஆட்டத்தில் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டோம். இந்தத் தோல்வியால் மிகுந்த ஏமாற்ற மடைந்திருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக நினைத்தோம்” என்றார்.

சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் குறித்துப் பேசிய ஃபிளெம்மிங், “எங்கள் அணி 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அது சவாலான இலக்குதான். ஆனால் மும்பை அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்