பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

திங்கள்கிழமை டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 9 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதை பஞ்சாப் அணி உறுதி செய்தது.

இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள பஞ்சார் அணி 9 வெற்றிகளையும், 2 தோல்வி களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 18 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பஞ்சாப் உள்ளது. பஞ்சாப் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 69 ரன்களும், கெவின் பீட்டர்சன் 32 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பஞ்சாப் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓரா, அக்ஸர் பாட்டீல் ஆகியோர் தலா 42 ரன்கள் எடுத்தனர். அதில் ஓரா 19 ரன்களில் 42 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது டெல்லி அணிக்கு 7-வது தொடர் தோல்வியாகும். 12 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 10 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் என்ற நிலையுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கெனவே அந்த அணி இழந்துவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்