வெற்றிக் கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி: ரோஹித் சர்மா ஆதங்கம்

By பிடிஐ

மும்பை அணியில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டோம். ஆனால் அவையனைத்தும் தோல்வி யிலேயே முடிந்தன என்று ஆதங்கப்பட்டுள்ளார் அதன் கேப்டன் ரோஹித் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தோடு சேர்த்து தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றுள்ளது மும்பை. அதனால் விரக்தியடைந்துள்ள ரோஹித் சர்மா மேலும் கூறியதாவது:

அடுத்ததாக எங்கள் அணியின் சரியான வெற்றிக் கூட்டணி (வீரர்கள்) எது என்று பார்க்க வேண்டும். அதற்கான தேடலில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த 4 போட்டிகளிலும் 5 பவுலர் களோடு களமிறங்கியதோடு, பேட்ஸ்மேன்களின் வரிசையை யும் மாற்றிப் பார்த்தோம். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன.

சரியான கூட்டணியை பெறு வதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதல் 3 ஆட்டங் களில் நாங்கள் என்ன செய்தா லும் அதற்கு பலன் கிடைக்க வில்லை. அதனால் சூப்பர் கிங்ஸுக்கு எதிராக புதிய உத்தியைக் கையாண்டோம். அதன்படி ஆண்டர்சனை 3-வது பேட்ஸ்மேனாக களமிறக்கினோம்.

கடந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆண்டர்சன் 95 ரன்கள் குவித்ததால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றோம். அதை மனதில் வைத்தே இந்த முறை 3-வது பேட்ஸ்மேனாக களமிறக்கினோம். அது முற்றிலும் தவறாகிவிட்டது. புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் ஆண்டர்சனை 3-வது வீரராக களமிறக்கியது மிகச் சரியானதுதான் என்றார்.

அடுத்த ஆட்டத்தில் நியூஸி லாந்து வீரர் மிட்செல் மெக்லீனா கான் களமிறக்கப்படுவார் எனக் கூறிய ரோஹித் சர்மா, “மிட்செல் திறமையான பவுலர். அவரை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைத்தோம். எனினும் வலுவான பேட்டிங்குடன் களமிறங்க வேண்டும் என விரும்பி யதால் அவரை சேர்க்காமல் சிம்மன்ஸுக்கு வாய்ப்பளித்தோம்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்