ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காலிறுதியில் தமிழகமும், விதர்பாவும் மோதின.
முதல் இன்னிங்ஸில் தமிழகம் 403 ரன்களும், விதர்பா 259 ரன்களும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதைத் தொடர்ந்து 411 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த விதர்பா அணி கடைசி நாளான நேற்று ஆட்டநேர முடிவில் 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழகம் அரையிறுதியை உறுதி செய்தது.
முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் குவித்த தமிழக வீரர் சங்கர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
இந்தியா
13 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
40 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
48 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
33 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago