ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு ரயில்வே ஆட்டம் டிரா

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ரயில்வே இடையிலான ரஞ்சி போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ரயில்வே, 3 புள்ளிகள் பெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு தனது முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் எடுத்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் ரயில்வே தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று, ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆசிஷ் யாதவ் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். ரங்கராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று முன்தினம் கழுத்தில் பந்து தாக்கியதால் காயம்பட்ட ரோஹன் போசேல், கடைசியாக ஆடவந்து 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர், தமிழக அணி தனது 2-வது இன்னிங்ஸில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. டிரா ஆன இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரயில்வே அணி அதிக ரன்கள் எடுத்ததால் 3 புள்ளிகள் பெற்றது. தமிழக அணிக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

11 mins ago

கருத்துப் பேழை

20 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்