மைக்கேல் கிளார்க்கிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்கக் கூடாது: இயன் சாப்பல்

By செய்திப்பிரிவு

முதுகுவலியினால் கடுமையாக அவதிப்படும் மைக்கேல் கிளார்க் குணமடைந்து வந்தால் கூட அவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை அளிக்கக் கூடாது என்கிறார் இயன் சாப்பல்.

கிளார்க் மீண்டும் வந்தால் அவரை பேட்ஸ்மெனாக மட்டுமே வைத்துக் கொள்வது நலம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் இயன் சாப்பல்.

சானல் 9-இல் அவர் இது குறித்து கூறியதாவது: “சிறிது காலத்திற்கு ஸ்மித் கேப்டனாக நீடிப்பதை அனுமதிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் சிறப்பாக செயல்பட்டால் மைக்கேல் கிளார்க் திரும்பி வரும்போது அவரிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மித்தை முழு நேர கேப்டனாகத் தொடர அனுமதிக்க வேண்டும்.

மைக்கேல் கிளார்க் மீண்டும் வந்தால், அவரது காய வரலாறு அணித் தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலியாகப் போய் முடியும். ஒரு போட்டியில் இருப்பார் பிறகு 2 போட்டியில் விளையாட முடியாது போகும். இதனைத் தவிர்க்க ஸ்மித்திடம் நம்பிக்கை வைக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்