ஆனந்த் கார்ல்சன் இடையே நடக்கும் உலக செஸ் போட்டியின் 7-வது சுற்று ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது.
ரஷ்யாவின் சூச்சியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 6-வது சுற்றின் முடிவில் கார்ல் சன் 3.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். ஆனந்த் 2.5 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலை யில் நேற்று 7-வது சுற்று ஆட்டம் நடந்தது. 6-வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடி கார்ல்சன் ஜெயித்ததால் மீண்டும் அவர் 7வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறபோது ஆனந்தை வெல்லும் வாய்ப்பு உருவாகுமா என்கிற கேள்வி எழுந்தது.
வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டால், எப்படியாவது இந்தச் சுற்றை டிரா செய்ய ஆனந்த் முயற்சி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 5 சுற்றுகளில் ஆனந்த் 3 சுற்றுகளில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுவதால், இந்தச் சுற்றின் முடிவு இந்தப் போட்டியின் திருப்பமாக அமையும் என்று அனைவரும் கருதினார்கள்.
e4 - e5 என ஆரம்பமானது முதல் நகர்த்தல். ஆனந்த், பெர்லின் ஆட்டமுறையைத் தேர்ந் தெடுத்தார். ஆரம்பத்திலிருந்து இருவரும் வேகமாக ஆடினார்கள். 8வது நகர்த்தலில் இருவருடைய ராணிகளும் வெளியேறின. 20 நிமிடங்களில் 25 நகர்த்தல்களை ஆடினார்கள். 20வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆகக்கூடிய சூழல் இருந்தது. ஆனந்தின் 28...Ne5 நகர்த்தல், கார்ல்சனுக்கு சிறிய வாய்ப்பை அளித்தது. இதைக் கொண்டு அவர் நிச்சயம் வெற் றியை நெருங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பலரும் கார்ல்சன் எப்படியும் வெற்றி பெற்றிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று 8வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
சினிமா
45 mins ago
வணிகம்
27 mins ago
இந்தியா
39 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
சினிமா
40 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago