தேசிய டேக்வாண்டோ போட்டி தூத்துக்குடி மாணவர் தேர்வு

By செய்திப்பிரிவு

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி, மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள பார்க் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தூத்துக்குடி சேம்பியன்ஸ் டேக்வாண்டோ கிளப்பில் பயிற்சி பெறும், தூத்துக்குடி பெல் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெரின் மைக்கேல் சப் ஜூனியர் 25- 27 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் ஜெரின் மைக்கேல் கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்றுவிட்டு, தேசியப் போட்டியில் கலந்து கொள்கிறார்.

மாணவனையும், பயிற்சியாளர்கள் செல்வம் கிறிஸ்டோபர், ராஜா ஆகியோரையும், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர, மாவட்ட டேக்வாண்டோ கழக செயலாளர் பால ஜெயராம், ஆலோசகர் கிருபாகர், தேசிய நடுவர் ஜெப்ரி ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்