இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல. ஐசிசி போட்டிகளில் ஏற்கெனவே வீழ்த்தி இருக்கிறோம் என்பதால், உலகக்கோப்பையிலும் வீழ்த்துவோம் என்று இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சி்ல்வா தெரிவித்துள்ளார்.
தற்போது 8 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் இலங்கை அணி 6-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணியால் இந்திய அணியை வென்றால்கூட உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது. இந்த சூழலில் வரும் சனிக்கிழமை ஹெடிங்லியில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 23 ரன்களில் வென்று, நம்பிக்கையுடன் இலங்கை அணி இருக்கிறது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளை மட்டும் இலங்கை வீழ்த்தியுள்ளது
இந்திய அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. இதேபோன்ற முடிவை இந்த முறையும் இலங்கை அணி எதிர்பார்த்து காத்திருப்பதாக அந்த அணி வீரர் டிசில்வா பேட்டி அளித்துள்ளார்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப்பின், இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " இந்திய அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி அல்ல. கடந்த சாம்பியன்ஸ்டிராபி போட்டியில் இந்திய அணியை வென்றிருக்கிறோம். ஐசிசி போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி அதிகமான நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்று போட்டியை உயர்ந்த இடத்தில், அதாவது முடிப்போம். இந்திய அணியை எங்களால் வெல்ல முடியும்.
ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்காகவே முயற்சித்து வருகிறோம், இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால், உலகக்கோப்பைத் தொடரில் 5-வது இடத்துக்கு உயர்வோம் " எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
சினிமா
9 mins ago
உலகம்
23 mins ago
விளையாட்டு
30 mins ago
ஜோதிடம்
12 mins ago
ஜோதிடம்
59 mins ago
தமிழகம்
49 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago