ஜடேஜாவை இந்திய அணியில் சேர்க்க வேண்டுமா என்ற கேள்விக்கு ‘இப்போதைக்கு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் துண்டு துணுக்கு வீரராக இருக்கும்’ ஜடேஜாவை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ரீதியில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சஞ்சய் மஞ்சுரேக்கர், இன்று இலங்கை அணிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக வீசியதையடுத்து அரையிறுதி இந்திய அணியில் அவர் பெயரை சேர்த்துள்ளார், ஆனாலும் கிண்டல்கள் குறையவில்லை.
சஞ்சய் மஞ்சுரேக்கரின் ‘துண்டு துணுக்கு வீரர்’ விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த ஜடேஜா, ‘நான் உங்களை விட இருமடங்கு போட்டிகளில் ஆடிவிட்டேன் இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள் என்ற ரீதியில் ட்வீட் செய்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் ட்விட்டரில் அரையிறுதி இந்திய அணியை அறிவித்திருந்தார், அதில் ரோஹித், ராகுல், விராட், பந்த், ஹர்திக், தோனி, ஜடேஜா, புவி, ஷமி, குல்தீப், பும்ரா என்று பெயர்களை வெளியிட்டார், இதில் பலரும் அதிசயிக்குமாறு ஜடேஜா பெயர் இடம்பெற்றிருந்தது. கீழே அடிக்குறிப்பில் பிட்ச் பந்துகள் திரும்பும் பிட்சாக இருந்தால்... என்றும் மஞ்சுரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் குறிப்பிட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தன் ட்விட்டர் பக்கத்தில் “அந்த துண்டு துணுக்கு கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து விட்டீர்கள் போலிருக்கிறதே” என்று கேலித்தொனியில் ட்வீட் செய்திருந்தார்.
இந்த 2 ட்வீட் பதிவுகளுக்கும் நெட்டிசன்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
உலகம்
4 mins ago
தமிழகம்
31 mins ago
சினிமா
19 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
39 mins ago
வாழ்வியல்
58 mins ago
சுற்றுலா
1 hour ago
வணிகம்
6 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago