3-வது டெஸ்ட்டில் இருந்து ரங்கனா ஹெராத் விலகல்

By ஏஎஃப்பி

முதுகுவலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் விலகியுள்ளார். இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 12-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் விலகியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூர்யா, “கடுமையான முதுகுவலி காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் ரங்கனா ஹெராத் ஆடமாட்டார்” என்றார். குணரத்னே, சுரங்கா லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் ஏற்கெனவே காயம் அடைந்துள்ள நிலையில் தற்போது ஹெராத்தும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

42 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்