விராட் கோலி நிச்சயமாக நல்ல பேட்ஸ்மென் ஆனால் சச்சின், திராவிட், லஷ்மண் வரிசையில் இவரைச் சேர்க்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொகமது யூசுப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஜியோ சூப்பர் சானலில் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஆடிய காலத்தில் இருந்த கிரிக்கெட்டின் தரத்தை இப்போதைய தரத்துடன் ஒப்பிட முடியாது. விராட் கோலி மிக நல்ல பேட்ஸ்மன் தான். அவர் ஆடுவதை பார்க்க விருப்பம் கொண்டவன் தான் நான். ஆனாலும் சச்சின், திராவிட், லஷ்மண் தரவரிசையில் அவர் இல்லை.
வாசிம் அக்ரம், வாக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கு எதிராக ரன்கள் எடுப்பது ஜோக் அல்ல. டெண்டுல்கர், திராவிட் துல்லியத்தை நோக்கிச் சென்றவர்கள். தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த நிறைய நேரம் செலவிட்டவர்கள். நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு கிளாஸ் என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் இப்போது காலங்கள் மாறிவிட்டன.
இவ்வாறு கூறினார் யூசுப்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
இந்தியா
55 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago