ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபேல் நடால் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 143-வது இடத்தில் உள்ள இஸ்ரேலின் டெனிஸ் ஷாபலோவை எதிர்த்து விளையாடினார். சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 4-6, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்குச் சொந்தக்காரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 33-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெர்ரரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்றது. கால் இறுதியில் ரோஜர் பெடரர், 16-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட்டுடன் மோத உள்ளார். - ஏஎன்ஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
உலகம்
10 hours ago
வாழ்வியல்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
தமிழகம்
13 hours ago