வரும் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணி தங்கள் பவுலர்களுக்குச் சாதகமாக பிட்ச் தயாரித்தால் இந்திய அணியை பிரச்சினைக்குள்ளாக்கலாம் இல்லையெனில் வாய்ப்பில்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நல்ல ஃபார்மில் இருந்தும், முரளி விஜய்க்குப் பதிலாக ஷிகர் தவண் அணியில் சேர்க்கப்பட்டு கம்பீருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இலங்கை தொடர் குறித்து அவர் கூறியதாவது:
“கண்டிப்பாக இந்திய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது, இந்திய அணியைச் சிக்கலக்குள்ளாக்கும் பந்து வீச்சு இலங்கையிடம் இல்லை. தங்கள் பவுலர்களுக்குச் சாதகமாக பிட்ச்கள் அமைப்பதே இந்திய அணியைச் சிக்கலுக்குள்ளாக்குவதற்கான ஒரே வழி.
20 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த பிட்களை கட்டாயமாக அந்த அணிக்கு சார்பாக அவர்கள் அமைத்தால் வெற்றி பெறலாம்.
வடிவங்கள் அடிக்கடி மாறுவது பிரச்சினையல்ல எந்த அணியும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4வது இன்னிங்ஸில் 391 ரன்களை துரத்தி இலங்கை வெற்றி பெற்றிருக்கலாம். எந்த ஒரு அணிக்கு எதிரான வெற்றியும் நல்லதே. ஆனால் இந்திய அணி வேறு. இந்திய அணியின் சவால் முற்றிலும் வேறுபட்டது, இது மிகவும் கடினமானது.
எந்த ஒரு வடிவத்திலும் தொடக்க வீரர்கள் பங்களிப்பு முக்கியம். அதுதான் நடுவரிசை வீரர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளிக்கும்” என்றார் கம்பீர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago