இலங்கை அணியில் புதிய சுழல் வீரர்

By செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளராக மலின்டா புஷ்பகுமாரா இடம் பெற்றுள்ளார்.

30 வயதான புஷ்பகுமாரா, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 558 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். அவர் ஒருவர் மட்டுமே அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் தனஞ்ஜெயா டி சில்வா, வேகப் பந்து வீச்சாளர் நூவன் பிரதீப் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இவர்களில் புஷ்பகுமாரா, இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக் ஷன் சந்தகனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக விலகிய தினேஷ் சந்திமால் இடத்தை தனஞ்ஜெயா டி சில்வா கைப்பற்றி உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்ஜெயா இடம் பெறவில்லை. இதேபோல் துஷ்மந்தா ஷமீராவுக்கு பதிலாக நூவன் பிரதீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

ரங்கான ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குணரத்னே, நிரோஷன் திக்வெலா, தனஞ்ஜெயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, திலுருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லகிரு குமரா, விஷ்வா பெர்ணாண்டோ, மலின்டா புஷ்பகுமாரா, நூவன் பிரதீப். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

7 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

36 mins ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்