இந்திய அணியை 600 ரன்களுக்காவது மட்டுப்படுத்த முடிந்ததே: நுவான் பிரதீப் (அ)திருப்தி!

By பிடிஐ

கால்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், கோலியை பவுன்சரில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

“கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர், அவரை அவ்வாறு வீழ்த்தியதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப்போன்ற ஒரு வீரருக்கு நாங்கள் நிறைய திட்டமிடுவோம், அப்படிப்பட்ட திட்டத்தில் ஒன்றுதான் அவருக்கு வீசிய அந்தப் பந்து. எனக்கு உண்மையாகவே அவரது விக்கெட் மகிழ்ச்சியளிக்கிறது.

6 விக்கெட் சிறப்பானதுதான், ஆனால் நான் சிறப்பாக முதலில் வீசவில்லை, தொடர்ந்து வீசிய போதுதான் எனக்கு ரிதம் கிடைத்தது. திட்டத்துடன் தான் போட்டியில் களமிறங்கினோம், ஆனால் பிட்சின் தன்மை திட்டங்களை மாற்றியது, ஆனால் நாங்கள் செய்த சில விஷயங்கள் சரியல்ல.

தற்போது ஆட்டம் உள்ள நிலை எங்களுக்கு திருப்தியாக இல்லை. நிறைய திட்டங்கள் மோசமாகப் போய்விட்டது. புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால் அது எப்போதும் சரியாகச் செல்வதில்லை. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் என்பது இத்தகையதுதான் நாம் அதனை புரிந்து கொள்ள வேண்டும், குறைந்தது அவர்களை (இந்திய அணியை) 600 ரன்களுக்காவது மட்டுப்படுத்தினோமே.

மேத்யூஸ், திலுருவன் கிரீசில் நிற்கின்றனர், நாளை உணவு இடைவேளை வரை அவர்கள் நிற்க வேண்டும். தேநீர் இடைவேளை வரை ஆடினால் ஒருவேளை அபாயக் கட்டத்தைக் கடக்க வாய்ப்புள்ளது” என்றார் நுவான் பிரதீப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

37 mins ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்