யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான பிரணாய், காஷ்யப் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனாஹிம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் காஷ்யப், தனது சகநாட்டைச் சேர்ந்த ஷமீர் வர்மாவை எதிர்த்து விளையாடினார். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 21-13, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
கடந்த 7 மாதங்களில் சர்வதேச போட்டிகளில் காஷ்யப் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறையாகும். கடைசியாக அவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கொரிய ஓபன் போட்டியில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார். இன்று நடைபெறும் அரை இறுதியில் காஷ்யப், கொரியாவின் வாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீரரான பிரணாய், கால் இறுதியில் 10 -21, 21-15, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை வீழ்த்தினார். அரை இறுதியில் 15-ம் நிலை வீரரான வியட்நாமின் டியன் மின்ஹ் நிகுயனுடன் மோதுகிறார் பிரணாய். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஹிரோகி, மசாயுகி ஜோடியை வென்றதுபி
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சுற்றுச்சூழல்
2 mins ago
தமிழகம்
12 mins ago
சினிமா
18 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
40 mins ago
சினிமா
58 mins ago
இந்தியா
1 hour ago