அரை இறுதியில் பிரணாய், காஷ்யப்

By பிடிஐ

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான பிரணாய், காஷ்யப் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனாஹிம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் காஷ்யப், தனது சகநாட்டைச் சேர்ந்த ஷமீர் வர்மாவை எதிர்த்து விளையாடினார். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 21-13, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

கடந்த 7 மாதங்களில் சர்வதேச போட்டிகளில் காஷ்யப் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறையாகும். கடைசியாக அவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கொரிய ஓபன் போட்டியில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார். இன்று நடைபெறும் அரை இறுதியில் காஷ்யப், கொரியாவின் வாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீரரான பிரணாய், கால் இறுதியில் 10 -21, 21-15, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை வீழ்த்தினார். அரை இறுதியில் 15-ம் நிலை வீரரான வியட்நாமின் டியன் மின்ஹ் நிகுயனுடன் மோதுகிறார் பிரணாய். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஹிரோகி, மசாயுகி ஜோடியை வென்றதுபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சுற்றுச்சூழல்

2 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

58 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்