பிரேசிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய பளு தூக்கும் அணிக்கான தேர்வு பாட்டி யாலாவில்நடந்தது. இதில் 77 கிலோ எடைப்பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் தேர்வாகி உள்ளார். அவர் ஸ்நாச் பிரிவில் 151 கிலோ, கிளீன் அன்டு ஜெர்க் பிரிவில் 185 கிலோ என மொத்தம் 336 கிலோ எடையைத் தூக்கினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியா னாவில் பயிற்சி பெற்று வரும் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘ஒலிம்பிக் போட் டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி யாக உள்ளது. கடந்த ஒரு மாத மாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு தகுதிப் போட்டிக்குத் தேர் வானேன். காமன்வெல்த் போட்டி யில் தங்கம் வென்றபோது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது சுலபம் என்று நினைத்தேன். ஆனால் காமன்வெல்த் போட்டி யைவிட நான்கு மடங்கு கடுமை யாக பயிற்சி பெற்றேன். வீட்டை யும் பெற்றோரையும் மறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டேன்.
ஒலிம்பிக் போட்டி தொடங்க இரண்டு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் கடுமையாக பயிற்சியை மேற்கொண்டு தற்போதைய நிலை யைவிட கூடுதலாக 20 கிலோ எடை யைத் தூக்குவதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளேன். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வெல்லுவேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago