ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
இந்தியா - ஏ கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா - ஏ அணி தற்போது ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன், பேர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி 169 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடி 112 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
66 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
32 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago