ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன்: இரட்டையர் பிரிவில் ஜப்பானிடம் இந்தியா தோல்வி

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அஸ்வினி பொன்னப்பா-ஜுவாலா கட்டா ஜப்பானிய ஜோடியிடம் முதல் போட்டியில் தோல்வி தழுவினர்.

மிசாகி மட்சுடோமா-அயாகா டகாஹாஷி ஜோடி இந்திய ஜோடியை 21-15, 201-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இரண்டாவது செட்டில் 1-5 என்று பின் தங்கிய இந்திய ஜோடி பிறகு 6-3 என்று அசத்தியது. ஆனால் ஜப்பானிய வீராங்கனைகள் அதன் பிறகு அசாத்திய அதிரடியில் 10-6 என்று முன்னிலை பெற்றனர். அதன் பிறகு அஸ்வினி-ஜுவாலா ஜோடி ஒரு புள்ளியைப் பெறுவதற்குள் ஜப்பான் வீராங்கனைகள் 5 புள்ளிகள் பெற்று 15-7 என்று முன்னிலை பெற்றனர். கடைசியில் 20-10 என்று வென்றனர்.

முதல் செட்டில் பேக்-ஹேண்ட் ஸ்மேஷ் மற்றும் ஸ்லைஸ் ஆகிய ஷாட்களில் சிறந்து விளங்கிய அஸ்வினி-ஜுவாலா ஜோடி 12-15 என்று நெருங்கி வந்தனர். ஆனால் ஜப்பானிய வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் முதல் செட்டை 21-15 என்று இழந்தனர்.

இந்தத் தோல்வியை அடுத்து நெருக்கடியான நிலையில் நாளை ஹாலந்து அணியைச் சந்திக்கின்றனர். இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்