மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராக இருப்பதாக லோ கேஷ் ராகுல் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவு களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் இதுவரை நடந்த 2 பயிற்சி ஆட்டங்க ளிலும் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்துள்ளார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் அவர் சேர்க்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லோகேஷ் ராகுல் கூறியதாவது:
இந்திய அணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்படுவது என் கையில் இல்லை. இருப்பினும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக ஆடத் தயாராக உள் ளேன். மேற்கிந்திய தீவுக ளில் நடந்த பயிற்சி ஆட்டங் களில் எனது பேட்டிங் திருப்தி யளிப்பதாக உள்ளது. இங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்டு ஆட இந்த இரு போட்டிகளும் எனக்கு உதவி யுள்ளன.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்களில் ரன் சேர்ப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதற்கு மிகவும் போராட வேண்டும். இங்குள்ள ஆடுகளங்கள் தற்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக உள் ளன. அஸ்வின், ஜடேஜா போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதால் அது நமக்கு சாதகமாக இருக் கும் என்று நம்புகிறேன். இந்திய அணியின் புதிய பயிற்சி யாளரான அனில் கும்ப்ளே, எங்களுக்கு மிகவும் பக்கபல மாக இருக்கிறார். மேற்கிந்திய தீவுகளில் பல போட்டிகளில் ஆடிய அவரது அனுபவம் எங்க ளுக்கு நிச்சயம் கைகொடுக் கும். இங்குள்ள மைதானங் களைப் பற்றி எங்களுக்கு அவர் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago