ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பளு தூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், ஹாக்கி வீரர்கள் ஜேஸ், ருபிந்தர் பால் சிங், நடை பந்தய வீரர் கணபதி, தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், தருண், மோகன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் சரத் கமல் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்குகிறார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கப் பதக்கம் வென்றுள்ள போதிலும் ஒலிம்பிக்கில் இதுவரை சாதிக்கவில்லை.
கடந்த 2014-ல் நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதித்தவர் வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம். இம்முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் உள்ளார்.
ஆடவர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியில் திருச்சியின் ஆரோக்கிய ராஜிவ், திருப்பூரின் தருண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் மாற்று வீரராக சென்னையை சேர்ந்த மோகன் குமார் உள்ளார்.
20 கிலோ மீட்டர் நடை போட்டியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கணபதி பங்கேற்கிறார். ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் ஜேஸ், ருபிந்தர் பால் சிங் இருவரும் தமிழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான்.
முக்கிய செய்திகள்
வணிகம்
32 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago